سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ: أَقَنَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصُّبْحِ؟ قَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ؟ قَالَ: «بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا»
பாடம் : 7
(தொழுகையில்) ருகூஉவுக்கு முன்பும் பின்பும் குனூத் (எனும் சிறப்பு துஆ) ஓதுதல்.
1001. முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றனர்.
‘ருகூவுக்கு முன்பு குனூத் ஓதி இருக்கிறார்களா?’ என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ‘ருகூவுக்குப் பின்பு சிறிது காலம் (அதாவது ஒரு மாத காலம்) நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதினார்கள் என விடையளித்தார்கள்.
அத்தியாயம்: 14