سَمِعْتُ ابْنَ عُمَرَ يَتَمَثَّلُ بِشِعْرِ أَبِي طَالِبٍ:
«وَأَبْيَضَ يُسْتَسْقَى الغَمَامُ بِوَجْهِهِ … ثِمَالُ اليَتَامَى عِصْمَةٌ لِلْأَرَامِلِ»
பாடம்: 3
பஞ்சம் நிலவும் போது மழைவேண்டிப் பிரார்த்திக்கும்படி மக்கள் இமாமிடம் கோருவது.
1008. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“இவர் வெண்ணிறம் கொண்டவர்;
இவர் முகம்தனை முன்வைத்தே;
முகில்மழை கேட்கப்படும்;
அநாதைகளின் புகலிடம்;
விதைவைகளின் காவலர்”
என்று அபூதாலிப் அவர்கள் பாடிய கவிதையை இப்னு உமர் (ரலி) அவர்கள் (சிலநேரம்) எடுத்தாள்வதை நான் செவியேற்றுள்ளேன்.
அத்தியாயம்: 15