🔗

புகாரி: 1009

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

رُبَّمَا ذَكَرْتُ قَوْلَ الشَّاعِرِ، وَأَنَا أَنْظُرُ إِلَى وَجْهِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَسْقِي، فَمَا يَنْزِلُ حَتَّى يَجِيشَ كُلُّ مِيزَابٍ 
وَأَبْيَضَ يُسْتَسْقَى الغَمَامُ بِوَجْهِهِ … ثِمَالُ اليَتَامَى عِصْمَةٌ لِلْأَرَامِلِ
«وَهُوَ قَوْلُ أَبِي طَالِبٍ»


1009. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது அவர்களின் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் (சொற்பொழிவு மேடையிலிருந்து) கீழே இறங்குவதற்குள் எல்லா நீர்வழித்தடங்களிலிருந்தும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது நான்,

“இவர் வெண்ணிறம் கொண்டவர்;
இவர் முகம்தனை முன்வைத்தே;
முகில்மழை வேண்டப்படும்;
அநாதைகளின் புகலிடம்;
விதைவைகளின் காவலர்”

எனும் கவிதையை நான் நினைத்துக் கொள்வேன். இது அபூதாலிப் அவர்களின் கவிதையாகும்.

அத்தியாயம்: 15