«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى المُصَلَّى يُصَلِّي، وَأَنَّهُ لَمَّا دَعَا – أَوْ أَرَادَ أَنْ يَدْعُوَ – اسْتَقْبَلَ القِبْلَةَ وَحَوَّلَ رِدَاءَهُ»
பாடம் : 20 மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது கிப்லாவை முன்னோக்குதல்.
1028. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் (மழைத் தொழுகையைத்) தொழுவதற்காகத் திடலுக்குப் புறப்பட்டார்கள். துஆச் செய்தபோது அல்லது துஆச் செய்ய நாடியபோது கிப்லாவை முன்னோக்கினார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.
Book : 15