كَانَ إِذَا رَأَى المَطَرَ، قَالَ: «اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا»
பாடம் : 23 மழை பொழியும் போது கூற வேண்டியவை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (2:19 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸய்யிப் எனும் சொல்லுக்கு மழை என்று பொருள். (ஸய்யிப் என்பதன் கடந்தகால வினைச் சொற்களான) ஸாப, அஸாப ஆகியவற்றின் எதிர்கால வினைச் சொல் யஸூபு என்பதாகும்.
1032. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழையைக் காணும்போது ‘பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)’ என்று கூறுவார்கள்.
Book : 15