قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا، وَفِي يَمَنِنَا» قَالَ: قَالُوا: وَفِي نَجْدِنَا؟ قَالَ: قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا» قَالَ: قَالُوا: وَفِي نَجْدِنَا؟ قَالَ: قَالَ: «هُنَاكَ الزَّلاَزِلُ وَالفِتَنُ، وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ»
1037. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
‘இறைவா! எங்கள் ஷாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் ‘எங்கள் நஜ்து நாட்டிற்கும் (பிரார்த்தியுங்கள்)’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அங்குதான் குழப்பங்களும் பூகம்பங்களும் ஏற்படும். அங்கு தான் ஷைத்தானின் கொம்பு தோன்றும்’ என்று கூறினார்கள்.
அத்தியாயம்:15