«الشَّمْسُ وَالقَمَرُ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا»
பகுதி 13 எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை.
இது பற்றி அபூ பக்ரா(ரலி) மூகீரா(ரலி), அபூ மூஸா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.
1057. அபூ மஸ்ஊத் (ரலி) அறிவித்தார்.
சூரியனும் சந்திரனும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எனவே நீங்கள் கிரகணத்தைக் கண்டால் (அது விலகும்)வரை தொழுங்கள்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.
Book : 16