انْكَسَفَتِ الشَّمْسُ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ، فَقَالَ النَّاسُ: انْكَسَفَتْ لِمَوْتِ إِبْرَاهِيمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا، فَادْعُوا اللَّهَ وَصَلُّوا حَتَّى يَنْجَلِيَ»
பாடம் : 15 கிரகணத்தின் போது பிரார்த்தித்தல்.
இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூமூசா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.
1060. முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார்.
இப்ராஹீம்(ரலி) மரணித்த நேரத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது.
‘இப்ராஹீமின் மரணத்திற்காகக் கிரகணம் ஏற்பட்டது’ என்று மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரண்டு அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அது விலகும் வரை தொழுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 16