إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ – أَوْ سَاقَاهُ – فَيُقَالُ لَهُ فَيَقُولُ: «أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا»
பாடம் : 6 நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை.
நபி (ஸல்) அவர்கள் தமது பாதங்களில் வெடிப்பு(ம் வீக்கமும்) ஏற்படும் அளவுக்கு (இரவில்) நின்று வணங்குவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ஃபுத்தூர் எனும் சொல்லுக்கு வெடிப்பு என்று பொருள். (ஃபுத்தூர் என்பதன் வினைச் சொல்லான) இன்ஃபத்தரத் எனும் சொல்லுக்கு வெடித்தது; பிளந்தது என்று பொருள்.
1130. முகீரா(ரலி) அறிவித்தார்.
சில சமயம் நபி(ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள்.
Book : 19