يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي، فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ
பாடம் : 14
இரவின் கடைசி நேரத்தில் பிரார்த்திப்பதும் தொழுவதும்.
அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் இரவில் குறைவாகவே உறங்குவார்கள். அதிகாலை முன்னேரங்களில் பாவமன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். (51:17,18)
1145. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book : 19