🔗

புகாரி: 1184

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَتَيْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الجُهَنِيَّ، فَقُلْتُ: أَلاَ أُعْجِبُكَ مِنْ أَبِي تَمِيمٍ يَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ المَغْرِبِ؟ فَقَالَ عُقْبَةُ: «إِنَّا كُنَّا نَفْعَلُهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، قُلْتُ: فَمَا يَمْنَعُكَ الآنَ؟ قَالَ: «الشُّغْلُ»


1184. மர்ஸத் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.

நான் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அவர்களிடம் சென்று அபூ தமீம் மஃரிபுக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுகிறார்களே, உங்களுக்கு இது ஆச்சரியமாக இல்லையா? என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் அவ்வாறு செய்து வந்தோம்’ என்று விடையளித்தார்கள். இப்போது ஏன்விட்டுவிட்டீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘அலுவல்களே காரணம்’ என்றார்கள்.
Book :19