🔗

புகாரி: 1239

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ: أَمَرَنَا بِاتِّبَاعِ الجَنَائِزِ، وَعِيَادَةِ المَرِيضِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَنَصْرِ المَظْلُومِ، وَإِبْرَارِ القَسَمِ، وَرَدِّ السَّلاَمِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَنَهَانَا عَنْ: آنِيَةِ الفِضَّةِ، وَخَاتَمِ الذَّهَبِ، وَالحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالقَسِّيِّ، وَالإِسْتَبْرَقِ


பாடம்: 2

ஜனாஸாவைப் பின்தொடர்தல் பற்றிய கட்டளை.

1239. பராவு இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களை தடை செய்தார்கள்.

  1. ஜனாஸாவை பின் தொடரும் படியும்,
  2. நோயாளியை நலம் விசாரிக்கும் படியும்,
  3. விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் படியும்,
  4. அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும்,
  5. செய்த சத்தியத்தையும் பூரணமாக நிறைவேற்றும் படியும்,
  6. ஸலாமுக்கு பதில் கூறும்படியும்,
  7. தும்முபவருக்கு அவர் அல்ஹம்துலில்லாஹ்.. எல்லாப் புகழும் இறைவனுக்கே! என கூறினால் அருகிலிருப்பவர் யர்ஹமுகல்லாஹ் – இறைவன் உங்களுக்கு கருணை காட்டுவானாக’ என மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள்.

மேலும்,

  1. வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும்,
  2. ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும்,
  3. கலப்படமில்லாத பட்டையும்,
  4. அலங்காரப் பட்டையும்,
  5. எகிப்திய பட்டையும்,
  6. தடித்த பட்டையும் அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.

அத்தியாயம்: 23