🔗

புகாரி: 1240

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

حَقُّ المُسْلِمِ عَلَى المُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ المَرِيضِ، وَاتِّبَاعُ الجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ العَاطِسِ

تَابَعَهُ عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، وَرَوَاهُ سَلاَمَةُ بْنُ رَوْحٍ، عَنْ عُقَيْلٍ


1240. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை:

  1. ஸலாமுக்கு பதிலுரைப்பது,
  2. நோயாளியை விசாரிப்பது,
  3. ஜனாஸாவைப் பின்தொடர்வது,
  4. விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது,
  5. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அத்தியாயம்: 23

புகாரீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை அம்ர் பின் அபூஸலமா என்பவர், ஸுஹ்ரீ வழியாக அறிவித்திருப்பதைப் போன்றே அப்துர்ரஸ்ஸாக் அவர்களும் மஃமர் அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ வழியாக அறிவித்துள்ளார்.

இவ்வாறே ஸலாமா பின் ரவ்ஹ் என்பவரும், உகைல் பின் காலிதிடமிருந்து ஸுஹ்ரீ வழியாக அறிவித்துள்ளார்.