🔗

புகாரி: 1247

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَاتَ إِنْسَانٌ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَمَاتَ بِاللَّيْلِ، فَدَفَنُوهُ لَيْلًا، فَلَمَّا أَصْبَحَ أَخْبَرُوهُ، فَقَالَ: «مَا مَنَعَكُمْ أَنْ تُعْلِمُونِي؟» قَالُوا: كَانَ اللَّيْلُ فَكَرِهْنَا، وَكَانَتْ ظُلْمَةٌ أَنْ نَشُقَّ عَلَيْكَ فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ


பாடம் : 5 ஜனாஸாத் தொழுகையை (த் தலைவருக்கு) அறிவித்தல்

நீங்கள் (ஜனாஸாத் தொழுத போது) எனக்குத் தகவல் அளித்திருக்கக் கூடாதா என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்கள். 

1247. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவரை நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக விசாரிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இரவு அவர் இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவிலேயே அடக்கம் செய்துவிட்டனர். மறுநாள் காலையில் நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்ததும் ‘இதை அப்போதே எனக்கு நீங்கள் அறிவிக்காததன் காரணமென்ன?’ எனக் கேட்டார்கள்.

அதற்கு மக்கள், ‘கடுமையான இருள் சூழ்ந்த இரவு நேரமாக இருந்ததால் உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை’ என்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரின் கப்ருக்கு வந்து ஜனாஸாத் தொழுகை தொழுகை நடத்தினார்கள்.
Book : 23