🔗

புகாரி: 1257

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

تُوُفِّيَتْ بِنْتُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَنَا: «اغْسِلْنَهَا ثَلاَثًا، أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، إِنْ رَأَيْتُنَّ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي»، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَنَزَعَ مِنْ حِقْوِهِ إِزَارَهُ، وَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ»


பாடம் : 12 பெண் சடலம், ஆணின் கீழாடையால் கஃபனிடப்படலாமா? 

1257. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்)அவர்களின் மகள் மரணித்ததும் அவர்கள், ‘அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; குளிப்பாட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்’ எனக் கூறினார்கள். குளிப்பாட்டி முடித்து அவர்களுக்குத் தெரிவித்ததும் தம் இடுப்பிலிருந்து கீழாடையைக் களைந்து ‘இதை அவரின் உடம்பில் சுற்றுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 23