🔗

புகாரி: 1322

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«فَأَمَّنَا، فَصَفَفْنَا خَلْفَهُ»، فَقُلْنَا: يَا أَبَا عَمْرٍو، مَنْ حَدَّثَكَ؟ قَالَ: ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا


1322. ஷைபானி அறிவித்தார்.

தனித்திருந்த கப்ரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள் அதில் எங்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்துத் தொழுதோம் என்று நபி(ஸல்) அவர்களுடன் சென்ற ஒருவர் எனக்கு அறிவித்தார்’ என ஷஅபீ கூறினார். நாங்கள் ‘அம்ரின் தந்தை(யாகிய ஷஅபீ )யே! உங்களுக்கு அதை அறிவித்தவர் யார்?’ எனக் கேட்டதும் ‘இப்னு அப்பாஸ்(ரலி) தாம்’ என்றார் அவர்.
Book :23