كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِقَتْلَى أُحُدٍ: «أَيُّ هَؤُلاَءِ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ؟» فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى رَجُلٍ قَدَّمَهُ فِي اللَّحْدِ قَبْلَ صَاحِبِهِ، وَقَالَ جَابِرٌ: فَكُفِّنَ أَبِي وَعَمِّي فِي نَمِرَةٍ وَاحِدَةٍ
1348. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களைக் கண்டு இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அவரின் உடலை அவருடனிருந்தவருக்கு முன்பாக கப்ரில் வைத்தார்கள். இவ்விதம் என் தந்தையும் சிறிய தந்தையும் ஒரே துணியில் கஃபனிடப்பட்டார்கள்.
Book :23