🔗

புகாரி: 1350

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ بَعْدَ مَا أُدْخِلَ حُفْرَتَهُ «فَأَمَرَ بِهِ، فَأُخْرِجَ، فَوَضَعَهُ عَلَى رُكْبَتَيْهِ وَنَفَثَ عَلَيْهِ مِنْ رِيقِهِ، وَأَلْبَسَهُ قَمِيصَهُ»، فَاللَّهُ أَعْلَمُ وَكَانَ كَسَا عَبَّاسًا قَمِيصًا قَالَ سُفْيَانُ: وَقَالَ أَبُو هَارُونَ: وَكَانَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  قَمِيصَانِ، فَقَالَ لَهُ ابْنُ عَبْدِ اللَّهِ: يَا رَسُولَ اللَّهِ، أَلْبِسْ أَبِي قَمِيصَكَ الَّذِي يَلِي جِلْدَكَ، قَالَ سُفْيَانُ: «فَيُرَوْنَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلْبَسَ عَبْدَ اللَّهِ قَمِيصَهُ مُكَافَأَةً لِمَا صَنَعَ»


1350. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

(நயவஞ்சகர்ககளின்தலைவனான) அப்துல்லாஹ் இப்னு உபை கப்ருக்குள் வைக்கப்பட்ட பிறகு அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள் அ(ந்த மய்யித்)தை வெளியிலெடுக்குமாறு கூறினார்கள். வெளியிலெடுக்கப்பட்டதும் அதைத் தம் மடியில் வைத்து, அதன் மீது தம் உமிழ் நீரை உமிழ்ந்து, தம் மேலாடையையும் அதற்கு அணிவித்தார்கள்.

(இதற்குக் காரணம் என்னவோ?) அல்லாஹ்வே அறிந்தவன்! நபி(ஸல்) அவர்கள் ஆடை ஒன்றை அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு அணிவித்திருந்தார்கள். ‘அப்போது நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு மேலாடைகள் இருந்தன’ என அபூ ஹாரூனும் சுஃப்யானும் கூறுகின்றனர்.

அப்துல்லாஹ் இப்னு உபையின் மகன் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் மேனியைத் தழுவியுள்ள இவ்வாடையை என்னுடைய தந்தைக்கு அணிவியுங்களேன்’ என்று கோரி இருந்தார்.

இப்னு உபைக்கு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேலாடையை அணிவித்தது. அவர் (பத்ருப்போரின்போது கைதான அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு) உதவியதற்கான பிரதி உபகாரமாகத்தான்’ எனப்பலரும் கருதுகிறார்கள் என சுஃப்யான் கூறுகிறார்.
Book :23