🔗

புகாரி: 1364

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

حَدَّثَنَا جُنْدَبٌ رَضِيَ اللَّهُ عَنْهُ – فِي هَذَا المَسْجِدِ فَمَا نَسِينَا وَمَا نَخَافُ أَنْ يَكْذِبَ جُنْدَبٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ: كَانَ بِرَجُلٍ جِرَاحٌ، فَقَتَلَ نَفْسَهُ، فَقَالَ اللَّهُ: بَدَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الجَنَّةَ


1364. ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் இந்த (பஸ்ராவின்) பள்ளி வாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார்கள். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்தப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் பொய் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை.

அவர்கள் கூறியதாவது: “(முற்காலத்தில்) ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார்.

அப்போது அல்லாஹ், “என் அடியான் தன் (உயிர்) விஷயத்தில் (அவசரப்பட்டு) என்னை முந்திவிட் டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் தடுத்துவிட்டேன்” எனக் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 23