🔗

புகாரி: 1401

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ»


பாடம் : 2 ஸகாத் கொடுப்பதாக உறுதியளித்தல்

அல்லாஹ் கூறுகிறான்: ஆயினும் அவர்கள் தவ்பாச் செய்து தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் (முறையாகக்) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கத்தில் சகோதரர்களே. (9:11) 

1401. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும் ஸக்காத் வழங்குவதாகவும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்துக் கொண்டேன்.
Book :24