🔗

புகாரி: 1410

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ، وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ، وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ، كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ، حَتَّى تَكُونَ مِثْلَ الجَبَلِ»


பாடம் : 6 தர்மம் செய்வதில் முகஸ்துதி

அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன்பொருளைச் செலவழிப்பவனைப்போல் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும் நோவினை செய்தும் உங்கள் தான தர்மங்களைப் பாழாக்கிவிடாதீர்கள்! (2:264)

பாடம் : 7 மோசடிப் பொருளிலிருந்து தர்மம் செய்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை.

முறையான சம்பாத்தியத்தில் கிடைத்த பொருளிலிருந்தே தவிர (தான தர்மத்தை) ஏற்றுக்கொள்வதில்லை. அல்லாஹ் கூறுகிறான்: கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்த பின் நோவினையைத் தொடரும்படி செய்வதைவிட மேலானவையாகும். மேலும் அல்லாஹ் தேவையற்றவன்; மிக்க பொறுமையாளன். (2:263)

பாடம் : 8 முறையாகச் சம்பாதித்தவற்றைத் தர்மமாக வழங்குதல்

அல்லாஹ் கூறுகிறான் : தான, தர்மங்களைப் (பரக்கத்துக்களைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. யார் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையை நிலையாகக் கடைப் பிடித்து,ஸகாத்தும் கொடுத்துவருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்குத் தம் இறைவனிடத்தில் நற்பலன் இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (2:276, 277) 

1410. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ..( அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை )- அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 24