🔗

புகாரி: 1442

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ العِبَادُ فِيهِ، إِلَّا مَلَكَانِ يَنْزِلاَنِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا


பாடம் : 27 அல்லாஹ் கூறுகிறான் : எனவே யார் (தான தர்மம்) கொடுத்து, (தம் இறைவனை) அஞ்சி நல்லவற்றை உண்மை என (அவை நல்லவையென்று) ஏற்கின்றாரோ அவருக்கு நாம் இலகுவான (நன்மையின்) பாதையை எளிதாக்குவோம். ஆனால் யார் உலோபித்தனம் செய்து, (அல்லாஹ்வின் தயவு) தேவையற்றவனாக தன்னைக் கருதிக்கொள்கிறானோ இன்னும் நல்லவற்றை பொய்பிக்(க முயல்)கின்றானோ, அவனுக்கு சிரமத்திற்குரிய (தீமையின்) பாதையைத்தான் எளிதாக்குவோம். (92:5-10)

அல்லாஹ்வே! பொருளை தர்மம் செய்பவனுக்கு (அதற்குரிய) பிரதிபலனைக் கொடுப்பாயாக! (என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.) 

1442. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!’ என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!’ என்று கூறுவார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 24