🔗

புகாரி: 1446

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

بُعِثَ إِلَى نُسَيْبَةَ الأَنْصَارِيَّةِ بِشَاةٍ، فَأَرْسَلَتْ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا مِنْهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عِنْدَكُمْ شَيْءٌ؟» فَقُلْتُ: لاَ، إِلَّا مَا أَرْسَلَتْ بِهِ نُسَيْبَةُ مِنْ تِلْكَ الشَّاةِ، فَقَالَ: «هَاتِ، فَقَدْ بَلَغَتْ مَحِلَّهَا»


பாடம் : 31 ஸகாத்திலும் ஸதகாவிலும் கொடுப்பப்படவேண்டிய அளவும்-ஓர் ஆட்டை தர்மமாக்கலும். 

1446. ஹஃப்ஸா பின்த் ஸிரின் அறிவித்தார்.

நுஸைபா(உம்மு அதிய்யா(ரலி) அவர்களுக்கு ஓர் ஆடு (ஸதகாவாகக்) கொடுக்கப்பட்டது. அவர் அதில் கொஞ்சம் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆயிஷாவிடம்) ‘உங்களிடம் (உண்பதற்கு) ஏதும் உள்ளதா?’ எனக் கேட்டார்கள். ஆயிஷா(ரலி), ‘நுஸைபா(ரலி). ‘நுஸைபா(ரலி) அனுப்பி வைத்த இந்த ஆட்டைத் தவிர வேறெதுவும் இல்லை’ என்றதும் நபி(ஸல்) அவர்கள், ‘அதைக் கொண்டு வா! அது தன்னுடைய இடத்தை அடைந்துவிட்டது’ என்று கூறினார்கள்.
Book : 24