«اسْتَعْمَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنَ الأَسْدِ عَلَى صَدَقَاتِ بَنِي سُلَيْمٍ، يُدْعَى ابْنَ اللُّتْبِيَّةِ فَلَمَّا جَاءَ حَاسَبَهُ»
பாடம் : 67 ஸகாத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கு (ஸகாத் பொருளை விநியோகிக்க வேண்டும்) எனும் (9:60ஆவது) இறைவசனமும், ஸகாத் வசூலிப்பவர்களிடம் தலைவர் கணக்குக் கேட்க வேண்டும் என்பதும்.
1500. அபூ ஹுமைத் அஸ் ஸாயிதீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், இப்னு லுத்பிய்யா என்றழைக்கப்படும் அஸத் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை பனூஸுலைம் எனும் கோத்திரத்தாரிடையே ஸகாத் வசூலிப்பதற்காக நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்து) வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள்.
Book : 24