🔗

புகாரி: 1546

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَبِذِي الحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، ثُمَّ بَاتَ حَتَّى أَصْبَحَ بِذِي الحُلَيْفَةِ، فَلَمَّا رَكِبَ رَاحِلَتَهُ وَاسْتَوَتْ بِهِ أَهَلَّ»


பாடம் : 24 விடியும்வரை துல்ஹுலைஃபாவில் தங்குவது

இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். 

1546. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்கு செல்லும்போது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு அங்கேயே விடியும் வரை தங்கினார்கள். பிறகு வாகனத்தில் அமர்ந்து வாகனம் நிலைக்கு வந்தபோது இஹ்ராம் அணிந்தார்கள்.
Book : 25