🔗

புகாரி: 1570

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَدِمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَقُولُ: لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ بِالحَجِّ، «فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلْنَاهَا عُمْرَةً»


பாடம்: 35

ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறுவதும் அதில் ஹஜ் என்று வாயால் கூறுவதும். 

1570. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு ஹஜ்ஜுக்காகச் சென்றோம். அப்போது “லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க பில்ஹஜ்” எனக் கூறினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்கா நகருக்கு வந்தபோது) அதை உம்ராவாக ஆக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நாங்கள் அவ்வாறே ஆக்கினோம்.

அத்தியாயம்: 25