🔗

புகாரி: 1574

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«بَاتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذِي طُوًى حَتَّى أَصْبَحَ، ثُمَّ دَخَلَ مَكَّةَ» وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَفْعَلُهُ


பாடம் : 39 இரவிலோ அல்லது பகலிலோ மக்காவில் நுழைவது.

நபி (ஸல்) அவர்கள் தூத்துவாவில் இரவு தங்கிக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். 

1574. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஃதூத்துவா எனுமிடத்தில் இரவு தங்கிக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள்.

இப்னு உமரும்(ரலி) அவ்வாறே செய்தார் என நாபிவு கூறுகிறார்.
Book : 25