🔗

புகாரி: 1606

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَا تَرَكْتُ اسْتِلاَمَ هَذَيْنِ الرُّكْنَيْنِ فِي شِدَّةٍ وَلاَ رَخَاءٍ، مُنْذُ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُهُمَا»، قُلْتُ لِنَافِعٍ: أَكَانَ ابْنُ عُمَرَ يَمْشِي بَيْنَ الرُّكْنَيْنِ؟ قَالَ: «إِنَّمَا كَانَ يَمْشِي لِيَكُونَ أَيْسَرَ لِاسْتِلاَمِهِ»


1606. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி(ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் தொட்டதைப் பார்த்ததிலிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் தொடுவதை விட்டதில்லை.’

‘இப்னு உமர்(ரலி) அவ்விரு மூலைகளுக்கிடையே நடந்து செல்வாரா?’ என நாஃபிஉ(ரஹ்) அவர்களிடம் கேட்டபோது, ‘தொடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காக நடந்துதான் செல்வார்’ எனக் கூறினார்’ என்று உபைதுல்லாஹ் அறிவித்தார்.
Book :25