🔗

புகாரி: 1613

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«طَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَيْتِ عَلَى بَعِيرٍ، كُلَّمَا أَتَى الرُّكْنَ أَشَارَ إِلَيْهِ بِشَيْءٍ كَانَ عِنْدَهُ وَكَبَّرَ»


பாடம் : 62 ருக்னுக்கு அருகில் வரும் போது தக்பீர் கூறுதல்.

1613. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம்வந்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு ‘அல்லாஹு அக்பர்’ ‘அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று கூறினார்கள்.’
Book :25