🔗

புகாரி: 1623 & 1624

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1623. أَيَقَعُ الرَّجُلُ عَلَى امْرَأَتِهِ فِي العُمْرَةِ قَبْلَ أَنْ يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ؟ قَالَ: «قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، ثُمَّ صَلَّى خَلْفَ المَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ» وَقَالَ: (لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ إِسْوَةٌ حَسَنَةٌ)

1624. قَالَ: وَسَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالَ: «لاَ يَقْرَبُ امْرَأَتَهُ حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ»


1623 & 1624 அம்ர் அறிவித்தார்.

1623. உம்ராச் செய்யும் மனிதன் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் ஓடுவதற்கு முன்னால் தன் மனைவியோடு கூடலாமா? என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டோம். ‘நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது கஅபாவை ஏழு முறை சுற்றினார்கள்; பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு, ஸஃபா, மர்வாவிற்கு இடையில் ஓடினார்கள்’ என்று கூறிவிட்டு, இப்னு உமர்(ரலி) ‘உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உள்ளது’ என்ற வசனத்தை ஓதினார்.

1624. நான் இதே கேள்வியை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ‘ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஓடுவதற்கு முன்னால் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளக்கூடாது’ என அவர்கள் பதிலளித்தார்கள்.
Book :25