«إِذَا أُقِيمَتْ صَلاَةُ الصُّبْحِ فَطُوفِي عَلَى بَعِيرِكِ وَالنَّاسُ يُصَلُّونَ». فَفَعَلَتْ ذَلِكَ، فَلَمْ تُصَلِّ حَتَّى خَرَجَتْ
1626. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜை முடித்து) மக்காவிலிருந்து புறப்பட நாடினார்கள். வலம்வராத நிலையில் நானும் புறப்பட ஆயத்தமானேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஸுப்ஹுத் தொழுகைக்காக இகாமத் – சொல்லப்பட்டவுடன் மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது நீ ஒட்டகத்தின் மீதமர்ந்து வலம்வந்து கொள்’ எனக் கூறினார்கள். அவ்வாறே செய்தேன். இதனால் (இரண்டு ரக் அத்களை) பள்ளிக்கு வெளியே வந்த பிறகே தொழுதேன்.’
Book :25