🔗

புகாரி: 1648

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَكُنْتُمْ تَكْرَهُونَ السَّعْيَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ قَالَ: «نَعَمْ لِأَنَّهَا كَانَتْ مِنْ شَعَائِرِ الجَاهِلِيَّةِ حَتَّى أَنْزَلَ اللَّهُ»: {إِنَّ الصَّفَا وَالمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ البَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا} [البقرة: 158]


1648. ஆஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடுவதை நீங்கள் வெறுக்கக் கூடியவர்களாக இருந்தீர்களா?’ என நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்டேன்.

அதற்கவர், ‘ஆம்! ஏனெனில்

ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும். எனவே, யார் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறார்களோ அவர்கள் அவ்விரண்டையும் வலம் வருவதில் எந்தக் குற்றமுமில்லை’ என்னும் (திருக்குர்ஆன் 02:158) வசனம் அருளப்படும் வரை

அவ்விரண்டும் (எங்கள் பழைய நம்பிக்கைப்படி) அறியாமைக் காலச் சின்னங்களாகவே இருந்தன’ எனக் கூறினார்.
Book :25