أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا كَانَ رِدْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَةَ إِلَى المُزْدَلِفَةِ، ثُمَّ أَرْدَفَ الفَضْلَ مِنَ المُزْدَلِفَةِ إِلَى مِنًى، قَالَ: فَكِلاَهُمَا قَالاَ: «لَمْ يَزَلِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ العَقَبَةِ»
1686. & 1687. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபா வரை நபி(ஸல்) அவர்களின் பின்னால் (வாகனத்தில்) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அமர்ந்திருந்தார்கள். பிறகு முஸ்தலிஃபாவிலிருந்து மினா வரை ஃபள்ல்(ரலி) அவர்களை நபி(ஸல்) (தம் வாகனத்தில்) தமக்குப் பின்னால் ஏற்றினார்கள்.
‘நபி(ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள்’ என அவ்விருவரும் கூறினார்கள்.
Book :25