🔗

புகாரி: 1699

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«فَتَلْتُ قَلاَئِدَ هَدْيِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَشْعَرَهَا وَقَلَّدَهَا، أَوْ قَلَّدْتُهَا ثُمَّ بَعَثَ بِهَا إِلَى البَيْتِ، وَأَقَامَ بِالْمَدِينَةِ فَمَا حَرُمَ عَلَيْهِ شَيْءٌ كَانَ لَهُ حِلٌّ»


1699. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பலிப்பிராணிகளுக்கு, (அவற்றின்) கழுத்தில் தொங்கவிடும் அடையாள மாலையை நான் என் கையால் கோர்த்தேன். அவற்றை அவர்கள் பலிப்பிராணிகளின் கழுத்தில் தொங்கவிட்டார்கள்… அல்லது நான் அவற்றைப் பிராணிகளின் கழுத்தில் தொங்கவிட்டேன்..

பிறகு அதை கீறிக் காயப்படுத்தி அடையாளமிட்டார்கள். பிறகு அதை இறையில்லம் கஅபாவின் பக்கமாக அனுப்பி வைத்துவிட்டு, மதீனாவில் தங்கியிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எதுவும் விலக்கப்படவில்லை.
Book :25