🔗

புகாரி: 1719

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كُنَّا لاَ نَأْكُلُ مِنْ لُحُومِ بُدْنِنَا فَوْقَ ثَلاَثِ مِنًى، فَرَخَّصَ لَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كُلُوا وَتَزَوَّدُوا»، فَأَكَلْنَا وَتَزَوَّدْنَا قُلْتُ لِعَطَاءٍ: أَقَالَ: حَتَّى جِئْنَا المَدِينَةَ؟ قَالَ: لاَ


பாடம் : 124 குர்பானிப் பிராணியில் உண்ணப்பட வேண்டியவையும், தர்மம் செய்யப்பட வேண்டியவையும்.

இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டையாடிய குற்றத்திற்குப் பரிகாரமாகவோ நேர்ச்சையாகவோ குர்பானி கொடுப்பவர்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடலாகாது; மற்ற பிராணிகளைச் சாப்பிடலாம் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

ஹஜ்ஜுத் தமத்துஉவில் (கொடுக்கப்படும் குர்பானியை) உண்ணலாம்; பிறருக்கு உண்ணக் கொடுக்கலாம் என அதாஉ (ரஹ்) கூறுகிறார்கள். 

1719. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாள்களுக்கு மேல் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியைப் சாப்பிட மாட்டோம். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘சாப்பிடுங்கள்; சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி எங்களுக்குச் சலுகை வழங்கியதும் நாங்கள் சாப்பிட்டு, சேமித்து வைக்கலானோம்.

‘மதீனா வரும்வரை (சாப்பிட்டோம்)’ என்று ஜாபிர்(ரலி) கூறினாரா என அதாவிடம் கேட்டேன். அதற்கவர் ‘இல்லை’ என்றார் என இப்னு ஜுரைஜ் கூறுகிறார்.
Book : 25