🔗

புகாரி: 1725

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

يَا رَسُولَ اللَّهِ مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ؟ قَالَ: «إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ»


பாடம் : 126 இஹ்ராமின் போது தலை முடியில் களிம்பு தடவிப் படிய வைப்பதும், தலையை மழித்துக் கொள்வதும். 

1725. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! உம்ரா செய்துவிட்டு மக்கள் தங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்; ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே. என்ன காரணம்?’ எனக் கேட்டேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என்னுடைய முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்து விட்டேன்; என்னுடைய குர்பானிப் பிராணியின் கழுத்தில் மாலையும் தொங்க விட்டு விட்டேன்; எனவே, குர்பானி கொடுக்கும்வரை நான் இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது!’ என்றார்கள்.
Book : 25