🔗

புகாரி: 1732

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّهُ طَافَ طَوَافًا وَاحِدًا ثُمَّ يَقِيلُ، ثُمَّ يَأْتِي مِنًى، يَعْنِي يَوْمَ النَّحْرِ»

وَرَفَعَهُ عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ


பாடம் : 129

துல்ஹஜ் பத்தாம் நாள் தவாஃபுஸ் ஸியாரத்’ செய்தல்.

நபி (ஸல்) அவர்கள் தவாஃபுஸ் ஸியாரத்தை இரவு வரை தாமதமாக்கினார்கள் என ஆயிஷா (ரலி),இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கும் நாட்களில் தவாபுஸ் ஸியாரத் செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளார்கள். 

1732. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) ஒரேயொரு வலம் வந்துவிட்டுப் பகல் தூக்கமடைந்தார். பிறகு துல்ஹஜ் பத்தாம்நாள் மினாவுக்கு வந்தார்.

நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக (இப்னு உமர்(ரலி) கூறினார் என) மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.
Book : 25