🔗

புகாரி: 1749

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ حَجَّ مَعَ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَرَآهُ يَرْمِي الجَمْرَةَ الكُبْرَى بِسَبْعِ حَصَيَاتٍ، فَجَعَلَ البَيْتَ عَنْ يَسَارِهِ وَمِنًى عَنْ يَمِينِهِ، ثُمَّ قَالَ: «هَذَا مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ البَقَرَةِ»


பாடம் : 137 ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் போது இறையில்லம் கஅபா, தமது இடப் பக்கமிருக்கும்படி நிற்பது. 

1749. அப்துர் ரஹ்மான் இப்னு யஸித்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன்; அப்போது அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். அவர்கள் தங்களின் இடப்பக்கத்தில் கஅபாவும் வலப்பக்கத்தில் மினாவும் இருக்குமாறு நின்றார்கள். பிறகு அவர்கள் ‘இதுவே பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அவர்கள் எறிந்த இடமாகும்!’ என்று கூறினார்கள்.
Book : 25