🔗

புகாரி: 1757

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ – زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – حَاضَتْ، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَحَابِسَتُنَا هِيَ» قَالُوا: إِنَّهَا قَدْ أَفَاضَتْ قَالَ: «فَلاَ إِذًا»


பாடம் : 145 தவாஃபுஸ் ஸியாரத் செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால்…? 

1757. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவர் நம்மை (மக்காவிலிருந்து செல்லவிடாமல்) தடுத்துவிட்டாரா?’ எனக் கேட்டார்கள். அதற்கு தோழர்கள் ‘அவர் தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்கள்!’ என்று கூற, நபி(ஸல்) அவர்கள் ‘அப்படியானால் பரவாயில்லை! (நாம் போகலாம்!)’ என்றார்கள்.
Book : 25