🔗

புகாரி: 1763

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: أَخْبِرْنِي بِشَيْءٍ، عَقَلْتَهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ؟ قَالَ: «بِمِنًى»، قُلْتُ: فَأَيْنَ صَلَّى العَصْرَ يَوْمَ النَّفْرِ؟ قَالَ: «بِالأَبْطَحِ» افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ


பாடம் : 146 மக்காவிலிருந்து புறப்படும் நாளில் அப்தஹ்’ எனுமிடத்தில் அஸ்ர் தொழல். 

1763. அப்துல் அஸிஸ் இப்னு ருஃபை(ரஹ்) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 8ஆம் நாள் எங்கு லுஹர் தொழுதார்கள்?’ என நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘மினாவில்!’ என்று பதிலளித்தார்கள்.

அடுத்து நான், ‘(மக்காவிலிருந்து) புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13 வது) நாளில் நபி(ஸல்) அவர்கள் எங்கே அஸர் தொழுதார்கள்?’ என்று கேட்டதற்கு. ‘அப்தஹில்!’ என்று கூறிவிட்டு, ‘உன்னுடைய தலைவர்கள் செய்வது போல் நீயும் செய்து கொள்!’ என்று கூறினார்கள்.
Book : 25