🔗

புகாரி: 1771

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

حَاضَتْ صَفِيَّةُ لَيْلَةَ النَّفْرِ فَقَالَتْ: مَا أُرَانِي إِلَّا حَابِسَتَكُمْ، قَالَ: النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَقْرَى حَلْقَى، أَطَافَتْ يَوْمَ النَّحْرِ؟»، قِيلَ: نَعَمْ، قَالَ: «فَانْفِرِي»


பாடம் : 151 முஹஸ்ஸபிலிருந்து இரவின் கடைசி நேரத்தில் புறப்படுதல். 

1771. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஹஜ் முடித்துப் புறப்படும் நாளில் ஸஃபிய்யா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர் ‘நான் உங்களை (புறப்படுவதைவிட்டும்) தடுத்துவிட்டேன் எனக் கருதுகிறேன்’ என்றார்.

உடனே நபி(ஸல்) அவர்கள் ‘காரியத்தைக் கெடுத்து விட்டீரே!’ என்று கூறிவிட்டு ‘இவர் நஹ்ருடைய (10-ஆம்) நாளில் வலம்வந்துவிட்டாரா?’ எனக் கேட்டார்கள். அதற்கு ‘ஆம்’ எனச் சொல்லப்பட்டதும் ‘அப்படியாயின் புறப்படு!’ என்றார்கள்.
Book : 25