🔗

புகாரி: 1794

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


1794. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ,,உம்ராவில் ஒருவர் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்துவிட்டு ஸஃபா-மர்வாவுக்கிடையே தவாஃப் செய்யாமலேயே தமது மனைவியிடம் (தாம்பத்தியஉறவு கொள்ள) வரலாமா என நாஙகள் கேட்டோம்.

அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்கள் (மக்கா) வந்ததும் இறையில்லம் கஅபாவை ஏழுமுறை தவாஃப் செய்துவிட்டு மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதபின் ஸஃபா-மர்வாவுக்கிடையே ஏழுமுறை சஃயு, செய்தார்கள்.

எனவே நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது!,, எனக் கூறினார்கள். நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் ஸஃபா-மர்வாவுக்கிடையே சஃயு செய்யாமல் ஒருவர் தம் மனைவியை நெருங்கக் கூடாது! எனக் கூறினார்கள்.
Book :26