«إِنْ صُدِدْتُ عَنِ البَيْتِ صَنَعْتُ كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَهَلَّ بِعُمْرَةٍ، مِنْ أَجْلِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَهَلَّ بِعُمْرَةٍ عَامَ الحُدَيْبِيَةِ»
(ஹஜ் செய்வதிலிருந்து) தடுக்கப்படுதல்
பாடம்: 1
உம்ராவிற்குச் செல்பவர் தடுக்கப்பட்டால்…?
1806. நாஃபிவு (ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக மக்காவிற்குப் புறப்பட்டார்கள். ‘நான் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட போது) செய்தது போல் செய்வேன்!’ என்று கூறிவிட்டு உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததே இதற்குக் காரணமாகும்.
அத்தியாயம்: 27