«خَمْسٌ مِنَ الدَّوَابِّ لَيْسَ عَلَى المُحْرِمِ فِي قَتْلِهِنَّ جُنَاحٌ»
பாடம்: 7
இஹ்ராம் கட்டியவர் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினங்கள்.
1826. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை!
(அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்!)
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
அத்தியாயம்: 28