🔗

புகாரி: 1844

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

اعْتَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذِي القَعْدَةِ، فَأَبَى أَهْلُ مَكَّةَ أَنْ يَدَعُوهُ يَدْخُلُ مَكَّةَ حَتَّى قَاضَاهُمْ: لاَ يُدْخِلُ مَكَّةَ سِلاَحًا إِلَّا فِي القِرَابِ


பாடம் : 17 இஹ்ராம் கட்டியவர் ஆயுதம் தரிப்பது.

எதிரிகளைப் பற்றி அஞ்சினால் ஆயுதம் தரித்துக்கொள்ளலாம்; ஆனால் குற்றப் பரிகாரம் செய்ய வேண்டும்!என்று இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். குற்றப் பரிகாரம் செய்ய வேண்டும்’ என்று இக்ரிமா (ரஹ்) அவர்களைத் தவிர வேறுயாரும் கூறவில்லை. 

1844. பராவு(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்யப் புறப்பட்டார்கள். மக்காவிற்குள் நுழைய அவர்களை மக்காவாசிகள் அனுமதிக்கவில்லை. (அடுத்த ஆண்டில்) ஆயுதங்களை உறையில் போட்டுக் கொண்டு மக்காவினுள் நுழைவதாக அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்தார்கள்.
Book : 28