🔗

புகாரி: 1845

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَّتَ لِأَهْلِ المَدِينَةِ ذَا الحُلَيْفَةِ، وَلِأَهْلِ نَجْدٍ قَرْنَ المَنَازِلِ، وَلِأَهْلِ اليَمَنِ يَلَمْلَمَ، هُنَّ لَهُنَّ، وَلِكُلِّ آتٍ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِمْ، مِمَّنْ أَرَادَ الحَجَّ وَالعُمْرَةَ، فَمَنْ كَانَ دُونَ ذَلِكَ، فَمِنْ حَيْثُ أَنْشَأَ، حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ»


பாடம் : 18 இஹ்ராம் இல்லாமல் மக்காவிலும் ஹரம்-புனித எல்லையிலும் நுழைதல்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அவ்வாறு நுழைந்திருக்கிறார்கள். ஹஜ், உம்ரா செய்ய நாடுபவருக்குத்தான் இஹ்ராம் கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்;விறகு வியாபாரிகள் மற்றும் அவர்களைப் போன்றவர்களுக்கு இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. 

1845. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்தையும் நஜ்து வாசிகளுக்கு ‘கர்ன் அல் மனாஸில்’ எனும் இடத்தையும் யமன்வாசிகளுக்கும் ‘யலம்லம்’ எனும் இடத்தையும் இஹ்ராம் அணிவதற்குரிய எல்லையாக நிர்ணயித்தார்கள்.

இவ்வெல்லைகள் அந்தப் பகுதியினருக்கும் அதன் வழியாக வேறு பகுதியிலிருந்து ஹஜ், உம்ராவை நாடி வருபவருக்கும், உரியனவாகும்! இந்த எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் எந்த இடத்திலிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்தே இஹ்ராம் அணிய வேண்டும்; மக்காவாசிகள் மக்காவிலிருந்தே இஹ்ராம் அணிய வேண்டும்!’
Book : 28