🔗

புகாரி: 1850

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

بَيْنَا رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ، إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ، فَوَقَصَتْهُ أَوْ قَالَ: فَأَوْقَصَتْهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تَمَسُّوهُ طِيبًا، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، وَلاَ تُحَنِّطُوهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ القِيَامَةِ مُلَبِّيًا»


1850. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் அரஃபாவில் தங்கினார். அப்போது, அவர் தம் வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். வாகனம் அவரின் கழுத்தை முறித்து அவரைக் கொன்றுவிட்டது.

நபி(ஸல்) அவர்கள், ‘இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரைக் குளிப்பாட்டுங்கள்; இரண்டு ஆடைகளில் இவருக்குக் கஃபனிடுங்கள்! இவருக்கு நறுமணம் பயன்படுத்தாதீர்கள்; தலையை மூடாதீர்கள்! ஏனெனில், மறுமை நாளில் அல்லாஹ், இவரை தல்பியா கூறிக் கொண்டிருப்பவராக எழுப்புவான்!’ என்று கூறினார்கள்.
Book :28