🔗

புகாரி: 1874

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


பாடம் : 5 மதீனாவைப் புறக்கணித்தல். 
1874. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘மதீனா வளமிக்க நகராக இருக்கும் நிலையில், இரைதேடக் கூடிய பறவைகளும் விலங்குகளும் மட்டுமே நாடி வரக்கூடியதாக அதை மக்கள்விட்டு(ச் சென்று) விடுவார்கள்! மறுமை நாளில், இறுதியாக எழுப்பப்பட விருப்பவர்களை முஸைனா குலத்தைச் சேர்ந்த இரண்டு இடையர்களே ஆவர்!
(அவர்களின் மரணம் எப்படி நிகழுமெனில்) அவர்கள் இருவரும் தம் ஆடுகளை (இடையர்களின் பாணியில்) அதட்டி அழைத்த வண்ணம் மதீனாவை நாடிச் செல்வார்கள். (மதீனாவைச் சென்றடைந்ததும்) அதை (மனித சஞ்சாரமற்ற) மிருகங்களின் வசிப்பிடமாகக் காண்பார்கள்: இறுதியில் ‘வதா’ (எனும்) மலைக்குன்றை அடைந்தவுடன் முகம் குப்புற மூர்ச்சையுற்று விழுந்து (இறந்து) விடுவார்கள்!’
Book : 29