🔗

புகாரி: 1898

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ أَبْوَابُ الجَنَّةِ»


பாடம் : 5

ரமளான் என்று கூற வேண்டுமா?

ஷஹ்ரு ரமளான் (ரமளான் மாதம்) என்று கூற வேண்டுமா? என்பதும், எப்படியும் கூறலாம்! என்ற அறிஞர்களின் கருத்தும்.

நபி (ஸல்) அவர்கள் யாரேனும் ரமளானில் நோன்பு நோற்றால் என்றும் ரமளானுக்கு முந்தி என்றும் (ரமளான் மாதம் என்று கூறாமல்) குறிப்பிட்டுள்ளனர். 

1898. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 30