🔗

புகாரி: 1918

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ بِلاَلًا كَانَ يُؤَذِّنُ بِلَيْلٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ، فَإِنَّهُ لاَ يُؤَذِّنُ حَتَّى يَطْلُعَ الفَجْرُ»،

قَالَ القَاسِمُ: وَلَمْ يَكُنْ بَيْنَ أَذَانِهِمَا إِلَّا أَنْ يَرْقَى ذَا وَيَنْزِلَ ذَا


பாடம்: 17

பிலால் பாங்கு சொல்வது நீங்கள் சஹர் செய்வதிலிருந்து (-வைகறைக்கு முன் உண்பதிலிருந்து) உங்களைத் தடுத்து விட வேண்டாம்! என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று.

1918. ஆயிஷா (ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.

பிலால் (ரலி), (ஃபஜ்ரு நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர் தாம் ஃபஜ்ரு (கைவறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்!’ என்று குறிப்பிட்டார்கள்.


‘அவர் பாங்கு சொல்லிவிட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்கு ஏறுவார் என்பதைத் தவிர இரண்டு பாங்குக்குமிடையே பெரிய இடைவெளி இருக்காது!’ என்று காஸிம் (ரஹ்) கூறினார்.

அத்தியாயம்: 30